அந்தி கவியும் அந்திமமொன்றில் தான் ஆரம்பித்தன என் தோல்விகள்
புணராமல் புணர்தலென்னும் விதியை பந்தயப் பொருளாய் காட்டினாய்
கனவுலகில் உனை நெருங்க எத்தனித்து ஜெயித்துக்கொண்டது என் முதலாம் தோல்வி,
கண்களால் நான் தொடுக்க முயன்ற சைகைகளை சட்டையே செய்யவில்லை உன் வெற்றி
வார்த்தைகளால் புணர முயன்ற நவீன முயற்சியும்
உன் முன் மண்டியிட்டு மன்றாடி கதற நேர்ந்தது..
வெற்றிகளெனும் உன் காதல் பாதரசத்தை என் முயற்சிகளெனும்
காற்று நீர்க்கச்செய்வது எங்கணம்!
No comments:
Post a Comment