Pages

Tuesday 4 October 2011

தடம் திரும்பா பிறழ்வுகள்


  தை நான் பார்த்திருக்கக்கூடாது!! அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்!! எல்லோரும் என்னையே குறை சொல்லுகிறார்கள்....என்னையறியாமல் அந்த விஷயம் என் கண்ணில் பட்டதற்கு நானெப்படி பொறுப்பாக முடியும்?? முழு சதவிகிதம் என் தவறல்லாத ஒரு விஷயத்திற்காக என்னை மட்டுமே எல்லோரும் திட்டுவது எந்த விதத்தில் நியாயம்??
 பைக்கை அரக்கபரக்க அரைகுறை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தான் ரவி, கை கட்டி ஒரு ஓரமாக செய்வதறியாது திகைத்திருந்த என்னிடம்,
  "டேய் உனக்கு அறிவே கிடையாதாடா?? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?? இதெல்லாம் நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியாதா??

   வாய திறக்கிறானா பாருங்க!!  உறுமினான்...
  "டேய் என் தப்பு இல்லடா.....!
 "மூடு ..இனி ஒரு வார்த்தை பேசாத...!

 அடப்பாவி அதைத்தானே நான் இவ்வளவு நேரமும் செய்துக்கிட்டிருந்தேன்?! மனதிற்குள் தான்!!

வருகிறவனெல்லாம் எனக்கு இலவச அர்ச்சனை செய்வதும், அப்படியே நாலடி நடந்து ஐ.சி.யூ-வை எட்டிப்பார்த்து உச்சுகொட்டிவிட்டு தீவிர ஆலோசனையில் ஆழ்வதுமாக இருந்தனர். நான் மட்டும் சுவற்றோடு ஒட்டி , கூனி குறுகி!!
 ராமனுக்கு சீரியஸ்!! இதுவும் கூட இங்கே கூடிய கூட்டத்திற்கு காரணங்களில் ஒன்று....இன்னொன்று என்னை திட்டி தீர்ப்பதற்காக இருக்கலாம்!! 
                                     ---------------------------------------------------------------
  அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது, எழுந்திருந்து ஜலக்கிரிடையை முடித்துக்கொண்டு, அறைக்குள் வருகையில் நின்றிருந்தான் சுரேஷ். 
    "மச்சி குளிச்சிட்டு வந்துடுறேண்டா, இந்தா என் போனை சார்ஜ்ல போட்டிருக்கேன் பாரு ...ஏதாச்சும் கால் வந்தா எடுக்காத! சொல்லிதொலைத்தவன் போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு போயிருந்தாலும் பரவாயில்லை....
  அவன் போன மூன்றாவது நிமிடம் போன் அலறியது! நான் கண்டுக்கொள்ளவில்லை...

  ரெண்டு நிமிட இடைவெளியில் மீண்டும் அழைப்பு! 

 இன்னொரு முறை என்னால் இந்த சத்தத்தை சகிக்க முடியாது! இம்முறை போனை கையிலெடுத்தேன்.....அவன் வீட்டிலிருந்து அழைப்பு........லைன் துண்டிக்கப்பட்டதும் ஸ்கிரீனை பார்த்தேன்..... புது மெசேஜ் ஒன்று....ஃப்ரம் "டியர்"...என்றிருந்தது....அப்படியே வைத்துவிட்டிருக்கலாம்....ஆனால் ஏதோ ஒரு உந்துதலில் ஓபன் பண்ணிவிட்டேன்....அதை நான் செய்திருக்கக்கூடாது!!
                             ------------------------------------------------------------------
  எல்லோரும் இயல்பாகத்தானிருந்தார்கள்....எனக்கு தான் நிம்மதி வறண்டுவிட்டிருந்தது! இதில் எல்லோரும் ஏதோ தவிப்பிலிருப்பது போல ஒரு பிரமை வேறு! வகுப்பே சிரித்து திமிலோகப்பட்டுக்கொண்டிருக்க எனக்கு அந்த இடைவேளை நேரம் கூட சுமையாகி விட்டிருந்தது. நான் ஏன் வருத்தப்பட வேணும்?? எனக்கு என்ன வந்துச்சு?? வருத்தப்பட வேண்டிய ராமனே என்னருகில் உட்கார்ந்து சத்தம் போட்டு சிரித்துக்கொண்டிருக்கிறான்! இரண்டு பெஞ்ச் தள்ளி சுரேஷ்...!
  ராமனுக்கு லவ் ஃபெயிலியர்...! முதலாமாண்டிலிருந்தே தீவிரமாக என் வகுப்பு பெண்ணை காதலித்து வந்தான்...அவளும் கூட....
 எல்லோரும் இவர்களின் காதலை வியந்து பாராட்டினாலும் ஆரம்பம் முதலே எனக்கு இதில் உடன்பாடே இல்லை...இங்கு உடன்பாடு என்பது..இவர்கள் சின்சியராக காதலித்தார்கள் என்பதில் உடன்பாடில்லை எனும் பொருள் பெறுகிறது.
அட்மிஷன் போட்ட மூன்றாவது நாள் முளைத்த காதலிது. வருகைபதிவேட்டில் இவர்களிருவரது பெயர் உறுதியாவதற்கு முன்பே வகுப்பு சகாக்கள் இவர்களது காதலை உறுதிப்படுத்திக்கொண்டு கேன்டீனிலும்,கஃபேயிலுமாக மாறி மாறி ஆற்றிக்கொண்டிருந்தார்கள்.அவளது பெயர்?? அவளது பெயரை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு கெட்டவார்த்தையும் சேர்ந்தே வருகிறது!

  சொந்த ஏர்செல்லிலும், ஓசி ஏர்டெல்லிலும், குளிக்கப்போயிருந்த நண்ப,நண்பிகளின் பி.எஸ்.என்.எல்லிலும் காதலை ஜோராக வளர்த்தார்கள்... தெரு தெருவாக சுற்றுவதும், வகுப்பில் ஒரே ரொமாண்ஸுமாக ஒரே தொல்லை! ஒரே வாரத்தில் மொபலில் இருந்த ஆயிரம் ரூபாயை பேசி தீர்த்திருப்பதாக கஃபேயில் காபி குடித்துக்கொண்டிருக்கும்போது சொல்லி மார்தட்டிக்கொண்டான் ராமன்.நான் எதுவும் பேசவில்லை....உனக்கு பொறாமை என்றான்! நினைத்துக்கொள்ளட்டுமென 
 விட்டுவிட்டேன்.
     மூன்றாம் செமஸ்டர் வருவதற்கு முன்னமே நான் எதிர்பார்த்தது நடந்தது....செல்லம், வைரம், புஜ்ஜு எனக்கொஞ்சிக்கொண்டிருந்தவர்கள், குழாயடி தண்ணிக்கு சண்டைபோடுவதைப்போல போனிலேயே சிண்டு முடிய ஆரம்பித்தார்கள். 

 நேருக்கு நேரான பெஞ்ச்களில் மட்டுமே உட்கார்ந்து ரொமாண்ஸ் பண்ணும் பழக்கம் கூட புளித்துவிட்டிருக்க வேண்டும்!இப்போதெல்லாம் "அவள்" இவனை முறைக்க கூட கடைசி பெஞ்சை நோக்கி கழுத்தை திருப்ப வேண்டியிருந்தது .

  அவர்கள் காதலின் ஆரம்ப துளிர்ப்பு நிலை வலுப்பெற காரணமான நண்பர்கூட்டம் இப்போது எங்கே என்றே தெரியவில்லை! ஆனால் நான் வழக்கம் போல அவனோடு பேசி ,பாவித்திருந்தேன்.
                                      ----------------------------------------------------------------
 ஒரு மாதத்தில் எல்லாமும் முடிந்துவிட்டிருந்தது. ஆரம்பத்தில் அவளைப்பற்றியே பேசி சலிப்பான் ராமன்.இப்போதெல்லாம் மறந்துவிட்டிருந்தான் நடைபாதை கடைகளில் அவள் பெயரை பார்க்கும் போது கூட என்னிடம் கதையளக்காமல் கடந்து செல்லுமளவுக்கு! எப்போதாவது அவள் ஞாபகம் வந்தால் புகைவிட்டு மழுங்கிப்போகச்செய்துகொள்கிறான் . எப்படியோ எனக்கு தொல்லையில்லாமல் கடந்தன இரண்டு வாரங்கள்! ஆங் என் இன்னொரு நண்பனான சுரேஷ் பற்றி 
 சொல்ல மறந்தேவிட்டேனே...அவனும் எனக்கு ராமனை போல நெருக்கம் தான். என்னைவிட ராமனுக்கு ரொம்பவும் நெருக்கம்! "அவளும்,இவனும்,அவனும் கூட ஒன்றாக பேசி சிரித்திருக்கிறார்கள். ஏன் காதலை கைவிட்டானென நான் கேட்டதேயில்லை...அவனும் சொல்லவில்லை....
                                                     -----------------------------------
காலேஜ் முடிந்து பேருந்து பிடிக்க வேண்டிய அவசரத்தில் இருந்த நான் கால்குலேட்டரை பெஞ்சிலேயே விட்டுவிட்டதை பஸ்ஸ்டாப்பில் தான் உணர்ந்தேன். 
 ராமனை காத்திருக்கசொல்லிவிட்டு வேகவேகமாக ஓடிப்போய் பார்த்தால் கதவு பூட்டியிருந்தது. திகைத்துப்போய் துப்புரவு ஆயாவை அணுகினால் இன்னும் ரூமை பூட்டலப்பா போய் பாரு என்றாள். அட ஆமாம் கதவு சும்மா தான் சாத்தியிருந்தது.! ஒரு தள்ளு தள்ளினேன் ...உள்ளே நான் கண்ட காட்சி...........................
                                         ----------------------------------------------------------

 அந்த காட்சியே நான் "அவளை" அந்த கெட்டவார்த்தையோடு விளிப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது! அந்த சம்பவம் எனக்குள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.  அவரவர் விருப்பம் ...நான் ஏன் திட்ட வேணும்?? எவள் எவனோடு போனால் எனக்கென்ன?? நானாக திட்டவில்லை....அமைதியாக இதெல்லாம் சகஜம் தானென எண்ணி விட்டுவிட்டேன்.ஆனால் அந்த விளித்தலை நியாயப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது..
  அன்றிரவு தூக்கம் வராமல் நான் புரண்டு படுத்தாலும் அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது, எழுந்திருந்து ஜலக்கிரிடையை முடித்துக்கொண்டு, அறைக்குள் வருகையில் நின்றிருந்தான் சுரேஷ். 
    "மச்சி குளிச்சிட்டு வந்துடுறேண்டா, இந்தா என் போனை சார்ஜ்ல போட்டிருக்கேன் பாரு ...ஏதாச்சும் கால் வந்தா எடுக்காத! சொல்லிதொலைத்தவன் போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு போயிருந்தாலும் பரவாயில்லை....
  அவன் போன மூன்றாவது நிமிடம் போன் அலறியது! நான் கண்டுக்கொள்ளவில்லை...

  ரெண்டு நிமிட இடைவெளியில் மீண்டும் அழைப்பு! 

 இன்னொரு முறை என்னால் இந்த சத்தத்தை சகிக்க முடியாது! இம்முறை போனை கையிலெடுத்தேன்.....அவன் வீட்டிலிருந்து........லைன் துண்டிக்கப்பட்டதும் ஸ்கிரீனை பார்த்தேன்..... புது மெசேஜ் ஒன்று....ஃப்ரம் "டியர்"...என்றிருந்தது....அப்படியே வைத்துவிட்டிருக்கலாம்....ஆனால் ஏதோ ஒரு உந்துதலில் ஓபன் பண்ணிவிட்டேன்....அதை நான் செய்திருக்கக்கூடாது!!
 மூன்று வினாடி பிராஸஸுக்கு பிறகு இப்படியாக விரிந்தது அந்த குறுஞ்செய்தி,
  "சுரேஷ் அந்த சிவா (நான் தான்) நேத்து சாயங்காலம் என்கிட்ட புரஃபோஸ் பண்ணுறாண்டா!!
அடுத்த மெசேஜ்,
   "சுரேஷ் செல்லம் எங்க போய்ட்ட...அவனை என்ன பண்றது?? நான் என்னோட நோட் எடுக்க கிளாஸுக்கு போனப்போ இப்படி பேசுறான்!ஆனா நான் கண்டுக்கலை...எனக்கு நீ தாண்டா செல்லம் எல்லாமே...எனக்கு நீ தான் முக்கியம் ...அவன் நான் கிடைக்காத கோவத்தில உன் கிட்ட வந்து என்னை மத்தவங்களோட பார்த்ததா கூட சொல்லுவான் நம்பிடாதடா செல்லம்..உம்ம்மாமா "
  "நீ அவன்கிட்ட கேக்காத ,,,நானே பாத்துக்குறேன்...என்ன பண்ணட்டும் சொல்லு!
 "ரிப்ளை மீ மீ மீ மீ ",
அடுத்தடுத்த மெசேஜ்களில் என் ரத்தம் கொதிநிலையை அடைந்துவிட்டிருந்தது....
அடி "______________________________" என கத்திவிட்டேன் என் பொறுமையை மீறி......
பின்னாலேயே ராமன் நின்றிருந்ததை நான் கவனிக்கவில்லை....நான் "அவளை" திட்டியதை நியாயப்படுத்த உண்மைகளை உரைக்க வேண்டியாகிவிட்டது.
                                              ------------------------------------------------------

PRE-CLIMAX:
சொல்ல சொல்ல கேட்காமல் காலேஜ்க்கு லீவு போட்டான் ராமன். அவன் சுரேஷிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.அமைதியாக இருந்தான்.அவன் பக்குவத்தை எண்ணி வியந்துகொண்டே காலேஜை அடைந்தேன்.. ரூமில் தனியாக ராமன் இருந்தான்.


சரியாக மாலை ஐந்தரை மணிக்கு அழைப்பு அவசரமாக கே.எம்.சிக்கு வர சொல்லி...ராமன் என்னும் புண்ணாக்கின் பக்குவ நீட்சியை அசிங்க அசிங்கமாக திட்டியபடியே வந்து சேர்வதற்குள் எல்லோரும் கூடி விட்டிருந்தார்கள்...நான் உள்ளே போனதுமே சூழ்ந்துக்கொண்டு கன்னா பின்னாவென திட்டிதீர்த்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.என்ன மருந்தை ராமன் சாப்பிட்டதால் ஐ.சி.யூவில் வைத்திருக்கிறார்கள் என்று கூட யாரிடமும் கேட்க முடியாது!கொலை 
வெறியில் இருக்கிறான்கள் என்மேல் என் நிலையை சொன்னால் கேட்க வார்டு நர்ஸை தவிரவும் அங்கு யாரும் தயாராயில்லை.கூட்டத்திலிருந்து விலகி ஒரு 
ஓரமாக சுவரோரம் ஒதுங்கினேன்!   

  பைக்கை அரக்கபரக்க அரைகுறை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தான் ரவி, கை கட்டி ஒரு ஓரமாக செய்வதறியாது திகைத்திருந்த என்னிடம்,
  "டேய் உனக்கு அறிவே கிடையாதாடா?? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?? இதெல்லாம்
நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியாதா??

வாய திறக்கிறானா பாருங்க!!  உறுமினான்...
  "டேய் என் தப்பு இல்லடா.....!

"மூடு ..இனி ஒரு வார்த்தை பேசாத...!

 அடப்பாவி அதைத்தானே நான் இவ்வளவு நேரமும் செய்துக்கிட்டிருந்தேன்?! மனதிற்குள் தான்!!

  வருகிறவனெல்லாம் எனக்கு இலவச அர்ச்சனை செய்வதும், அப்படியே நாலடி நடந்து ஐ.சி.யூ-வை எட்டிப்பார்த்து உச்சுகொட்டிவிட்டு தீவிர ஆலோசனையில் ஆழ்வதுமாக இருந்தனர். நான் மட்டும் சுவற்றோடு ஒட்டி , கூனி குறுகி!!இதிலும் குரு ரொம்பவும் எகிறினான்.அவன் தான் அன்று கால்குலேட்டர் எடுக்க   போகையில்..............................


   நேரமாக நேரமாக எனக்கு பதட்டம் கூடியது. சுமார் எட்டரை மணிவாக்கில் ராமன் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொன்னார்கள். அப்போது கூட எல்லோரும் உள்ளே சென்று பார்த்துவர...என்னை மட்டும் உள்ளேவிடமாட்டேன் என்றார்கள்.
 நான் இப்போதைக்கு ரூமுக்கு திரும்புவது தான் உசிதம். 


POST-CLIMAX:
     தூக்கம் வராமல் புரண்டு படுத்திருந்தேன்.சிந்தனையெல்லாம் நண்பர்களை  சமாதானப்படுத்தப்போகும் வழியையே எண்ணிக்கொண்டிருந்தது . மணி 12ஐ நெருங்குகையில்.  மொபைல் சினுங்கியது. நியூ மெசேஜ்!!  ஏதோ அன்னோவ்ன் நம்பரிலிருந்து!! திறந்தேன்..

 "சிவா செல்லம்...............என ஆரம்பித்து காதல் ரசம் தளும்பும் காக்டெயில் மெசேஜ் அது! என்ன சொல்ற நீ?? என்று முடிந்திருந்தது. 


                 இப்படிக்கு,
                  "அவள்"    
எனக்கும் கூட அந்த மெசேஜை திரும்ப ஒருமுறை படிக்க வேண்டும் போலிருந்தது!   

1 comment:

  1. ஒரு வழியா நான் புரிஞ்சுகிற 10 நிமிஷம் ஆச்சு.... கடைசி உங்களுக்கு உள்ள மிருகமும் எந்திருச்சுனு நினைக்கும் போது தான கொஞ்சம் கஷ்டமா போச்சு....

    ReplyDelete